Manimangalam

  • முகப்பு
  • தொகுப்பு
  • பதிவுகள்
  • விவரங்கள்
  • தொடர்பு

வாழ்வளிக்கும் பனைமரம்!

உலகிலேயே முதலில் தோன்றிய குடியாக திகுழும் தமிழார்களுக்கும், பனை மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனை மரம் தமிழகத்தின் மாநில மரமாகவும் விளங்குகிறது. பனை மரம் தமிழர்களின் மொழியோடும், வாழ்வோடும் ஒன்றென கலந்தது என்பதற்குச் சான்றாக பல்வேறு சங்க கால நூல்களான திருக்குறள், தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனை மரத்தின் சிறப்புகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மாநில மரமாக அறியப்படும் பனையானது, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. பனை ஓலைச் சுவடிகள் மூலமாகவே நமக்கு பல இலக்கியங்களும் புராணங்களும் கிடைத்துள்ளன.

``நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பனை மரம் பூக்கிறது என்பதை நம்புவீா்களா..?"

பனை மரத்தில் மொத்தம் 34 வகையான பனை மரங்கள் உலகில் இருக்கின்றன. பனை மரத்தில் ஆண், பெண் என இரண்டு வகைகள் உள்ளன. அதில் தாளிப்பனை பூக்கும் இனத்தைச் சேர்ந்தது. இதை சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, கூந்தல் பனை, காலிப்பனை, விசிறிப்பனை, கூந்தற்பனை, தாளி, தாளம், ஆதம் குடைப்பனை என்ற பெயர்களாலும் பல்வேறு இடத்துக்கு ஏற்ற வகையில் அழைப்பது உண்டு. உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை தாளிப்பனை. தாளிப்பனையில் இருந்துதான் எழுதும் ஓலைச்சுவடிகளை உருவாக்கியுள்ளனா். வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டது. இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிறிய இலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில், பல லட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும்.

Home →

என்னற்ற பயனளிக்கும் பனை மரத்திலிருந்து பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு, பதநீர், பனங்கிழங்கு போன்றவற்றை நமக்கு அளித்து உடலுக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கியத்தையும் தருகின்றது. பனை ஓலைகள் பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும், கூரை வீடுகள் கட்டவும், முதிர்வுற்ற பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்யவும் பயன்படுகின்றன. பல்வேறு பயன்களைத் தரும் பனை மரமானது கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது. பனை மரங்கள் 100 அடி உயரம் வளர்ந்து 100 ஆண்டு காலத்திற்க்கு மேல் வாழும் தன்மையுடையது.

பனை பொருட்களில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது. வெயில் காலங்களில் உடம்பில் தோன்றும் வியர்க்கூர் மேல் நுங்குநீரைத் தடவினால் வியர்க்கூர் மறைந்துவிடுவதுடன் தோலுக்கு மென்மையும் அளிக்கிறது. தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் வெப்பநோய்கள் குறையும். செரிமானத்தை அதிகப்படுத்தவும், உடல் சூட்டை தணிக்கவும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் பதநீர் பயன்படுகிறது. தொண்டைப் புண்களை குணப்படுத்தவும், உடல் சூட்டைத் தணிக்கவும் பனங்கற்கண்டு பயன்படுகிறது.

தொழு நோயைக் குணப்படுத்த பனை வேர் பயன்படுத்தப்படுகிறது. பனங்கொட்டையிலுள்ள வெண்மை நிற தேங்காய் போன்ற பருப்பு உண்பதற்க்கும், எலும்பு முறிவைக் குணப்படுத்தும் எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது!

பனை மரம் வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது. அதிகப்படியான வெப்பமுள்ள நிலத்திலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது.

பனை விதை (கொட்டை) வழியாக பெருக்கம் செய்யப்படுகிறது.

இது ஆணிவேராக செல்வதால் பக்கவாட்டில் இருக்கும் எவற்றையும் பாதிப்பதில்லை. பனை மரங்கள் நிலத்தடி நீரை சேமிக்கும் அற்புத செயலை செய்கின்றது. நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு பனைமரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 150 லிட்டர் பதநீர், 20 கிலோ கருப்பட்டி, 15 கிலோ பனங்கற்கண்டு, 12 ஓலைகள் மற்றும் 10 கிலோ விறகு கிடைக்கும். ஆகவே பனை மரம் விவசாயிகளுக்கு உற்ற தோழனாகவும், வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றது.

நமது பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் பனை மரங்களை நேசிப்போம்!
பனை மரங்களை பாதுகாப்போம்!
பனை மரங்களினால் பயன்பெறுவோம்!
வளமுடன் வாழ்வோம்!

Home →

Copyright 2020.All Rights Reserved

Web Design: Aram

  • 97103 36162
  • aramdesign2019@gmail.com